Vellore Mutiny 1806 - History Study Notes

Admin
0

 Vellore Mutiny 1806 History Study Notes in tamil and PDF

வேலூர் புரட்சி:

  • கி.பி. 1801 ஆம் ஆண்டு தோன்றிய தென்னிந்தியப் புரட்சி முடிவுற்றாலும், அப்புரட்சி ஏற்படுத்திய அதிர்ச்சி மக்கள் மனதில் இருந்து அழியவில்லை.
  • சென்னை மாகாணத்தில் ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனம் வலிமைமிக்க சக்தியாக உருவெடுத்தது.
  • நான்காம் மைசூர் போருக்குப் பிறகு திப்புவின் குடும்பத்தினர் வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டனர்.
  • மைசூரின் ஹைதர் அலி, திப்புசுல்தான் ஆகியோரின் பணியாளர்கள் மற்றும் வீரர்கள் 3000 பேரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் அவர்கள் வேலூருக்கு அருகில் இடம் பெயர்ந்தனர். 
  • வேலூர் கோட்டை தென்னிந்திய கிளர்ச்சியாளர்களின் சந்திப்பு மையமாக திகழ்ந்தது.
  • 1803ல் வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங் என்பவர் சென்னை மாகாண கவர்னரானார். அவரது காலத்தில் (1805 - 1806 ல்) சில கட்டுப்பாடுகள் இராணுவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை பின்பற்ற வேண்டுமென இராணுவ வீரர்கள் சென்னை மாகாண படைத்தளபதி சர் ஜான் கிரடாக் என்பவரால் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
  • சிப்பாய்கள் அதனை தங்களை அவமானப்படுத்த ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டது எனக்கருதினர்.
  • ஜான் கிராடக் அறிமுகப்படுத்திய ராணுவச் சீர்திருத்தங்கள் வேலூர்ப் புரட்சிக்கு வித்திட்டது.

புரட்சிக்கான காரணங்கள்:

  • திப்புசுல்தானின் மரணத்திற்குப் பிறகு வேலூர்க் கோட்டையில் சிறைப்படுத்தப்பட்ட திப்புசுல்தானின் உறவினர்களால் இப்புரட்சி மேற்கொள்ளப்பட்டது.
  • இப்புரட்சிக்கு மூலகாரணமாக விளங்கிய சிப்பாய்கள், பாளையக்காரர்களின் வழி வந்தவர்கள். தமிழ் மற்றும் கன்னட மொழி பேசும் பகுதியைச் சார்ந்தவர்கள். தங்களுடைய உணர்வுகளை பரஸ்பரம் பரிமாற்றம் செய்து கொண்டனர்.
  • இராணுவத்தில் புகுத்தப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள், புதிய கருவிகள் மற்றும் சிப்பாய்களின் உடைகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் வீரர்களுக்கு வெறுப்பினை அளித்தது.
  • இந்துச் சிப்பாய்களின் காதணிகள், நெற்றியில் சமயக் குறிகள் இடுதல் போன்றவற்றிற்குத் தடை விதிக்கப்பட்டது.
  • முஸ்லீம்கள் தங்களுடைய தாடி, மீசைகளைக் குறிப்பிட்ட அளவுதான் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இது வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
  • ஆங்கிலேயர்கள், இந்திய சிப்பாய்களை தாழ்வாக நடத்தியதோடு மட்டுமல்லாமல் சிப்பாய்களிடையே இனபாராபட்சமும் காட்டினர்.
  • தளபதி அக்னியூ என்பவரால் அறிமுகப் படுத்தப்பட்ட புதிய வகை தலைப்பாகை இந்து முஸ்லீம்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
  • இதனால் சிப்பாய்கள் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக வெளிப்படையாக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 
  • புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தலைப் பாகையை அணிய மறுத்த சிப்பாய்களுக்கு 500 முதல் 900 சாட்டையடி தண்டனையாக விதிக்கப்பட்டும் பதவியிலிருந்தும் விலக்கப் பட்டனர். 

கலகத்தின் போக்கு:

  • இந்திய வீரர்கள் ஆங்கில அலுவலர்களைத் தாக்குவதற்கு ஒரு வாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருந்தனர். திப்பு குடும்பத்தினரும் இதில் பங்கெடுத்துக் கொண்டனர்.
  • திப்புவின் மூத்த மகன் பதே ஹைதர் ஆங்கிலேயருக்கு எதிரான ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்த முயன்றார்.
  • திப்புவின் மகளின் திருமண நிகழ்ச்சி ஜூலை 9, 1806 ஆம் ஆண்டு வேலூர்க் கோட்டையில் நடைபெற்றது.
  • இந்த திருமண நிகழ்ச்சியில் சிப்பாய்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
  • இதற்கிடையில் ஜுலை 10 ஆம் நாள் விடியற்காலை. முதலாவது மற்றும் 23 வது படைப்பிரிவுகளைச் சார்ந்த இந்திய சிப்பாய்கள் கலகத்தை தொடங்கினர்.
  • படையை வழிநடத்திய கர்னல் பான்கோர்ட் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு முதல் பலியானார். கோட்டையின் நுழைவாயில்கள் மூடப்பட்டன. அப்பொழுது கிளர்ச்சியாளர்கள் பதே ஹைதரை தங்களின் புதிய ஆட்சியாளராக அறிவித்தனர்.
  • வேலூர் கோட்டையில் ஆங்கிலக் கொடி இறக்கப்பட்டு புலி உருவம் பொறித்த திப்புவின் கொடி ஏற்றப்பட்டது.

கலகம் அடக்கப்படுதல்:

  • கோட்டையின் வெளியே இருந்த மேஜர் கூட்ஸ் இராணிப்பேட்டைக்கு விரைந்து கர்னல் கில்லெஸ்பிக்கு தகவல் கொடுத்தார்.
  • கர்னல் கில்லெஸ்பி உடனடியாக வேலூர் கோட்டையை அடைந்தார். அவர் கிளர்ச்சி படைகளின் மீது தாக்குதல் நடத்தி கலகத்தை முழுமையாக அடக்கினார். 
  • வேலூரில் அமைதி ஏற்படுத்தப்பட்டது. கலகத்தில் மொத்த 113 ஐரோப்பியர்கள் மற்றும் சுமார் 350 சிப்பாய்கள் கொல்லப்பட்டனர்.
  • குறுகிய காலத்திற்குள் கலகம் அடக்கப்பட்டது. 

வேலூர் கலகத்தின் விளைவுகள்:

  • புதிய முறைகள் மற்றும் சீருடை ஒழுங்கு முறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திப்புவின் குடும்பத்தினர் வேலூரிலிருந்து கல்கத்தாவிற்கு அனுப்பப்பட்டனர்.
  • வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

கலகத்தின் தோல்விக்கான காரணங்கள்:

  • இந்திய படை வீரர்களை வழிநடத்த சரியான தலைமையில்லை.
  • கலகம் மிகச் சரியாக வடிவமைக்கப் படவில்லை.
  • திப்புவின் பிள்ளைகளுக்குப் போதுமான போர்ப் பயிற்சி கிடையாது.
  • மேலும் அவர்கள் தங்கள் வாழ்வின் பெரும்பகுதியைச் சிறையில் கழித்தனர். இராணுவ வீரர்களுக்கு இந்திய அரசர்களிடமிருந்து ஆதரவு மற்றும் உதவிகளைப் பெற முடியவில்லை.
  • ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கை இந்தியர்களின் ஒற்றுமையில் பிளவை ஏற்படுத்தியது.
  • 1806 ல் நடந்த வேலூர் கலகத்தை, 1857 ல் நடைபெற்ற 'முதல் இந்திய சுதந்திரப் போரின் முன்னோடி என வி.டி.சவார்க்கர் குறிப்பிடுகிறார்.

விளைவுகள்:

  • வேலூர்ப் புரட்சி தோல்வியில் முடிவடைந்தது. இருப்பினும் பிற்காலத்தில் இது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தியது.
  • இந்திய வீரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திப்புவின் குடும்பத்தினர் கல்கத்தாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆறு வருடங்களுக்கு மேலாக அங்குச் சிறையில் அடைக்கப் பட்டனர்.
  • இந்தியர்களின் நாட்டுப்பற்று மற்றும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கையும் வெளிப்பட்டன. இப்புரட்சி தோல்வியில் முடிவுற்றது. இருப்பினும் 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சிக்கு முன்னோடியாக இது அமைந்தது.

Post a Comment

0Comments

Post a Comment (0)
To Top